நெல்லையில் முகமூடிக் கொள்ளையர்களை அடித்து விரட்டிய நெல்லை வீரத் தம்பதிக்கு அதீத துணிவுக்கான முதல்வரின் சிறப்பு விருது வழங்கி முதல்வர் பழனிசாமி கௌரவித்தார்.
சென்னை தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் சண்முகவேலு - செந்தாமரை ஆகியோருக்கு அதீத துணிவுக்கான முதல்வரின் சிறப்பு விருதுக்கான தங்கப் பதக்கம், காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி, அத்தம்பதியரின் துணிச்சலை முதல்வர் பழனிசாமி பாராட்டியதோடு சம்பவம் மற்றும் காயம்பற்றியும் கேட்டறிந்தார்.