உடலுக்கு உயிர் முக்கியமானது போல, விவசாயிகளுக்கு நீர் மிக முக்கியமானது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வரின் சிறப்புக் குறைதீர்ப்பு நிகழ்ச்சி 2ஆவது நாளாக சேலத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய முதல்வர்,
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. உடலுக்கு உயிர் முக்கியமானது போல, விவசாயிகளுக்கு நீர் மிக முக்கியமானது. கண்ணுக்கு இமை போல விவசாயிகள் நீர்நிலைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தகுதி வாய்ந்த மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காணப்படும். தகுதி வாய்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும். 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.