சென்னை: மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வு செய்யயப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதனன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், காங்கிரசின் மன்மோகன் சிங் அவர்கள் மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பின்வருமாறு:
மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டமைக்கு டாகடர் மன்ன்மோகன் சிங்கிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மன்மோகன் சிங்கின் அனுபவம், அறிவு மற்றும் தலைமைப் பண்பின் மூலமாக, வரும் காலங்களில் இந்த நாடும் நாடாளுமன்றமும் பெரும் பலன்களைப் பெற இருக்கிறது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.