ஆரோக்கியமாதா திருவிழா: வேளாங்கண்ணிக்கு 10 சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஆரோக்கியமாதா திருவிழாவையொட்டி வேளாங்கண்ணிக்கு 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன என திருச்சி கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. 
ஆரோக்கியமாதா திருவிழா: வேளாங்கண்ணிக்கு 10 சிறப்பு ரயில்கள் இயக்கம்


ஆரோக்கியமாதா திருவிழாவையொட்டி வேளாங்கண்ணிக்கு 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன என திருச்சி கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. 
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா திருவிழா வரும் செப். 8-ஆம் தேதி விமரிசையாக நடைபெறவுள்ளதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ரயில்கள் வேளாங்கண்ணிக்கு இயக்கப்படவுள்ளன. 
சென்னை சென்ட்ரலிலிருந்து..: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து செப். 3 இரவு 8.10-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06083) அடுத்த நாள் காலை 8 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.
இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, வேலூர் கண்டோன்மென்ட், ஆரணி சாலை, போளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதுபோல், வேளாங்கண்ணியிலிருந்து செப் 4 மாலை 4.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில்  (06084) நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், போளூர், அரக்கோணம் வழியாக அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும்.
எழும்பூரிலிருந்து..: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஆக. 28, செப். 4 ஆகிய 2 நாள்களில் இரவு 11.50-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06081) அடுத்த நாள் காலை 8 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக நின்று செல்லும். அதுபோல், வேளாங்கண்ணியிலிருந்து ஆக. 29, செப். 5 ஆகிய தேதிகளில் மாலை 5.20-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06082) நாகப்பட்டினம், மயிலாடுதுறை,விழுப்புரம், தாம்பரம் வழியாக சென்னை எழும்பூருக்கு அடுத்தநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்றடையும். 
திருவனந்தபுரத்திலிருந்து..: கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து ஆக. 28, செப். 4 -களில் இரவு 7.45-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06085) அடுத்தநாள் காலை 10.05-க்கு வேளாங்கண்ணி சென்றடையும். 
இந்த சிறப்பு ரயில் குளித்துறை, இரணியல், நாகர்கோயில் நகரம், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதுபோல், வேளாங்கண்ணியிலிருந்து 
ஆக. 29, செப். 5 -களில் இரவு 11.45-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06086) நாகப்பட்டினம், திருச்சி, நாகர்கோயில், குளித்துறை வழியாக திருவனந்தபுரத்துக்கு அடுத்த நாள் நண்பகல் 1.15 மணிக்கு சென்றடையும். 
எர்ணாகுளத்திலிருந்து..: எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து ஆக. 29, செப். 5 தேதிகளில் இரவு  11.25-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06079) அடுத்த நாள் நண்பகல் 12.25-க்கு வேளாங்கண்ணி சென்றடையும். அதுபோல், வேளாங்கண்ணியிலிருந்து ஆக. 30, செப். 6 தேதிகளில் மாலை 5.10-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06080) அடுத்தநாள் காலை 8.30-க்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.  இந்த சிறப்பு ரயில்கள் ஆலுவா, திரிசூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி,  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 
தாம்பரத்திலிருந்து..: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து செப். 8 இரவு 7.20-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06087) செங்கல்பட்டு, திண்டிவனம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை,திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.  
திருச்சியிலிருந்து..: திருச்சி ரயில் நிலையத்திலிருந்து செப். 8  நண்பகல் 1.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06089) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு மாலை 5.45 மணிக்கு சென்றடையும். 
குறிப்பிட்ட சிறப்பு ரயில்களில் பயணிகள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com