கீழடி அகழாய்வில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய குளியல் தொட்டி கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும்  5-ஆம் கட்ட அகழாய்வில், திங்கள்கிழமை 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய குளியல் தொட்டி கண்டெடுக்கப்பட்டது.
திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 5 -ஆம் கட்ட அகழாய்வில் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்ட 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய  குளியல் தொட்டி.
திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 5 -ஆம் கட்ட அகழாய்வில் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்ட 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய  குளியல் தொட்டி.


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும்  5-ஆம் கட்ட அகழாய்வில், திங்கள்கிழமை 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய குளியல் தொட்டி கண்டெடுக்கப்பட்டது.
கீழடியில், தமிழக தொல்லியல் துறை சார்பில் 5 -ஆம் கட்ட அகழாய்வுப்பணி நடைபெற்று வருகிறது. இப் பணிக்காக, தமிழக அரசு ரூ. 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த ஜூன் 13-ஆம் தேதி அகழாய்வுப் பணி தொடங்கியது.       
தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்று வரும் இப் பணிக்காக, 5 பேர்களின்  நிலங்களில் 27 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதுவரை மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறை கிணறுகள், இரும்பு பொருள்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை, மண்ணால் சுட்ட சிற்பங்கள் என 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும், இந்த அகழாய்வில் பல வகையான  சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 
இந்நிலையில், திங்கள்கிழமை அகழாய்வுப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய குளியல் தொட்டி கண்டெடுக்கப்பட்டது. இந்த தொட்டியானது, 3 அடி உயரம், 3 அடி நீளம், இரண்டரைஅடி அகலத்தில் செங்கற்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த அகழாய்வில் தினமும் பழங்காலத்து மக்கள் பயன்படுத்திய பொருள்கள் ஒவ்வொன்றாக கிடைத்து வரும் நிலையில், கீழடி அகழாய்வு தீவிரமடைந்துள்ளது. தினமும் ஏராளமானோர் இங்கு வந்து பழங்காலப் பொருள்களை பார்வையிட்டுச் செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com