புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு

புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என புதுச்சேரி மாநில பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினர் முதல்வர் வே.நாராயணசாமியிடம் அண்மையில் கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து மாநில பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினரின் கோரிக்கையை ஏற்று பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி புதுச்சேரி அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன் பால் கொள்முதல் விலையும் லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த விலை உயர்வு நாளை முதல் அமல்படுத்தப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் ஆவின் பால் விலை கடந்த வாரம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com