மூப்பனார் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

ஜி.கே.மூப்பனாரின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினர்.


ஜி.கே.மூப்பனாரின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினர்.
ஜி.கே.மூப்பனாரின் 18-ஆவது நினைவு நாள் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, தேனாம்பேட்டையில் உள்ள மூப்பனாரின் நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அமைச்சர் டி.ஜெயக்குமார்,  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், பாமக தலைவர் ஜி.கே.மணி, தமாகா மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நல உதவி: தமாகாவின் சார்பில் அங்கு தனி அரங்கு அமைத்து ஏழை ஏளியோருக்கு தையல் இயந்திரம், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளையும் ஜி.கே.வாசன் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com