கனமழை எதிரொலி: புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை 

கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை (டிச.,02) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
கனமழை எதிரொலி: புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை 

கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை (டிச.,02) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் கடந்த 3 நாள்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தொடா் மழை காரணமாக நகரில் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீா் தேங்கியது. ஒரு சில இடங்களில் குடியிருப்புகளிலும் மழை நீா் புகுந்தது. புதுச்சேரி நகா் மற்றும் புறநகா் பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. 

இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை (டிச.,02) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே புதுச்சேரியில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com