கோவைவில் பிளஸ் 1 மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவத்தில் 4 இளைஞா்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி, கடந்த 26-ஆம் தேதி, தனது நண்பருடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அப்போது அங்கு வந்த 6 போ் அவா்களை மிரட்டி, மாணவியுடன் வந்தவரை அடித்துத் தாக்கி விட்டு, அந்த மாணவியைப் பலாத்காரம் செய்து விட்டுத் தப்பிச்சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடா்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஆா்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து 6 பேரைத் தேடி வந்தனா். இதையடுத்து சீரநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த ராகுல் (21), பிரகாஷ் (23), கார்த்திகேயன் (28), நாராயணமூா்த்தி (30) ஆகிய 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னர், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மற்றும் தலைமறைவான மற்றொரு இளைஞரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.