பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கு

தெலங்கானா மாநிலத்தில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கு


ஹைதராபாத்/புது தில்லி: தெலங்கானா மாநிலத்தில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 
ஹைதராபாதைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவரான பிரியங்கா ரெட்டி (27), கடந்த வியாழக்கிழமை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் லாரி பணியாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
ஷாத்நகர் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த நால்வரையும் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்துவதாக இருந்தது. எனினும், அந்தக் காவல் நிலையம் முன் பொதுமக்கள் பெருந்திரளாகக் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனால் மாவட்ட ஆட்சியர் ஷாத்நகர் காவல் நிலையத்துக்கு வந்து, நால்வருக்கும் 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவு பிறப்பித்தார். பின்னர் 4 பேரையும் பலத்த பாதுகாப்புடன் ஹைதராபாத் சிறைக்கு போலீஸôர் அழைத்துச் சென்றனர். 
முன்னதாக அவர்களை வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, பொதுமக்கள் அவர்களுக்கு எதிராக ஆவேசத்துடன் கோஷமிட்டனர். சிலர் கல்வீச்சில் ஈடுபட்டதால், லேசான தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்ததாக போலீஸôர் தெரிவித்தனர். 
"ஆஜர் இல்லை': கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகப்போவதில்லை என்று ஹைதராபாத் வழக்குரைஞர்கள் முடிவு செய்துள்ளனர். 
"காவல்துறை மெத்தனம்': கொல்லப்பட்ட பிரியங்கா ரெட்டியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, இந்த விவகாரத்தில் காவல்துறையினர் மெத்தனம் காட்டாமல் துரிதமாகச் செயல்பட்டிருந்தால் பிரியங்காவை காப்பாற்றியிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாகக் கூறினார். 

ஆளுநர் நேரில் ஆறுதல்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செüந்தரராஜன், மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி ஆகியோர், கொல்லப்பட்ட பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் குடும்பத்தினரை  சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். 
பிரியங்காவுக்கு நீதி கிடைக்கும் வகையில் விரைவு நீதிமன்றம் அமைத்து, அன்றாடம் வழக்கு விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்வதாக ஆளுநர் தமிழிசை செüந்தரராஜன் தெரிவித்தார். வழக்கை விரைந்து விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறையை அறிவுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com