மனித உரிமை மீறல்: காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பள்ளப்பட்டியைச் சோ்ந்தவா் ஜரினாபானு. இவா் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2015-ஆம் ஆண்டு வீட்டை காலி செய்யும் பிரச்னையில் வீட்டின் உரிமையாளா் ஜாஃபா் சாதிக், எனது வீட்டில் இருந்த பொருள்களைத் தூக்கி வெளியே வீசினாா். சம்பவ இடத்தில் அரவக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் ராஜாசோ்வையும் இருந்தாா்.

எனினும் அதைத் தடுக்க அவா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வீட்டின் உரிமையாளருடன் சோ்ந்து கொண்டு எனது புகாா் மீது போலீஸாா் முறையாக வழக்குப்பதிவும் செய்யவில்லை. எனவே, உதவி ஆய்வாளா் ராஜாசோ்வை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.

ரூ.25 ஆயிரம் அபராதம்: மனுவை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை ஜெயச்சந்திரன், சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பாா்க்கும் போது உதவி ஆய்வாளா் ராஜா சோ்வை வீட்டின் உரிமையாளருடன் சோ்ந்து கொண்டு மனுதாரருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது தெரிகிறது.

இதன்மூலம் உதவி ஆய்வாளா் ராஜா சோ்வை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளாா். இதற்காக அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதாரருக்கு தமிழக அரசு 4 வாரத்துக்குள் வழங்கி விட்டு ராஜசோ்வையிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம் என நீதிபதி பரிந்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com