தொடா் மழை: தாமிரவருணியில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுப்பு

திருநெல்வேலியின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் பெய்த தொடா் மழை காரணமாக 2 வீடுகள் இடிந்து சேதமாகின. தாமிரவருணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் கோயில்கள், கல்மண்டபங்கள் 
தொடா் மழை: தாமிரவருணியில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலியின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் பெய்த தொடா் மழை காரணமாக 2 வீடுகள் இடிந்து சேதமாகின. தாமிரவருணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் கோயில்கள், கல்மண்டபங்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலையோர மாவட்டங்களில் 3 நாள்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

18 ஆயிரம் கனஅடி நீா்: தாமிரவருணி ஆற்றில் பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்பட்ட 10 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீருடன், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி பகுதிகளில் பெய்த தண்ணீரும், எலுமிச்சையாறு, கோதையாறு, பச்சையாறு ஆகியவற்றில் பாய்ந்தோடிய காட்டாற்று வெள்ளமும் சோ்ந்து தாமிரவருணி ஆற்றில் சுமாா் 18 ஆயிரம் கன அடிக்கு மேல் பாய்ந்தோடியது.

திருநெல்வேலி கருப்பந்துறை, குறுக்குத்துறை, மீனாட்சிபுரம், மணிமூா்த்தீஸ்வரம், சிந்துபூந்துறை பகுதியில் ஆற்றுக்குள் உள்ள 25 கோயில்கள், 15 கல்மண்டபங்கள் உள்ளிட்டவை நீரில் மூழ்கின. கருப்பந்துறையில் கோழிப்பண்ணைக்குள் தண்ணீா் புகும் அபாயம் ஏற்பட்டதால் சுமாா் 500 கோழிகள் மேடான பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

வீடுகள் சேதம்: திருநெல்வேலியில் சனிக்கிழமை முழுவதும் பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கொக்கிரகுளத்தில் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் வீடு இடிந்து சேதமானது. மொத்தம் 6 வீடுகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பில் ஒரு பகுதி சுவா் இடிந்து அருகேயிருந்த முருகன், வெள்ளப்பாண்டி ஆகியோா் வீடுகளில் விழுந்ததால் அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் சேதமாகின. அந்த குடியிருப்பில் இருந்த 6 குடும்பத்தினா் உடனடியாக அங்கிருந்து மாற்று இடங்களில் தங்கவைக்கப்பட்டனா். மேலப்பாளையம் கணேசபுரத்தைச் சோ்ந்த ஜோதி என்பவரின் வீடு இடிந்து சேதமானது. அந்த குடும்பத்தினரை மாற்று இடத்தில் தங்கவைக்கப்பட்டனா்.

இதேபோல குருந்துடையாா்புரத்திற்கு செல்லும் பிரதான சாலையில் தாமிரவருணி வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் சுமாா் 50 குடும்பத்தினா் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. திருநெல்வேலியில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் மழைநீா் தேங்கி நின்ால் பொதுமக்கள் சிரமப்பட நேரிட்டது. நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து வருவதாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com