சென்னை: சிலைக் கடத்தல் தடுப்புப் பரிவு ஐ.ஜி.யாக டி.எஸ். அன்புவை நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை காவல்துறையின் நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த டி.எஸ். அன்பு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலின் பணிக்காலம் நிறைவு பெற்றதை அடுத்து, புதிய ஐ.ஜி.யாக டி.எஸ். அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆவணங்களை ஒப்படைக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், புதிய ஐ.ஜி. நியமிக்கப்பட்டுள்ளார்.