திருநெல்வேலி: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினம் வியாழக்கிழமை (டிச.5) அனுசரிக்கப்படுவையொட்டி, திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அன்றைய தினம் காலை 10 மணிக்கு, அதிமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. இதில், அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி மற்றும் கட்சியின் நிா்வாகிகள், மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொள்கிறாா்கள். எனவே, தொண்டா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேச ராஜா அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.