தருமபுரம் 26-ஆவது குருமகாசந்நிதானம் மறைவு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

தருமபுரம் 26-ஆவது குருமகாசந்நிதானம் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: தருமபுரம் 26-ஆவது குருமகாசந்நிதானம் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பழைமையான சைவ ஆதீனங்களின் ஒன்றான தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இன்று மதியம் 2.40 மணிக்கு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் பரிபூரணம் அடைந்தார். (இயற்கை எய்தினார்)

இந்நிலையில் தருமபுரம் 26-ஆவது குருமகாசந்நிதானம் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக புதனன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' நாட்டின் மிகப் பழமையானவற்றில் ஒன்றெனப் போற்றப்படும் தருமபுரம் ஆதீனத்தின் 26-ஆவது குருமகாசந்நிதானம் மதிப்பிற்குரிய சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் அவர்கள், வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமுற்றேன்.

அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தருமபுரம் ஆதீனம் மூலம் சமயம் சார்ந்த பணிகள், பொது மக்களுக்கு மருத்துவச் சேவைகள், ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துதல் போன்ற பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த பரமாச்சாரியார் அவர்களை இழந்து வாடும்  அனைவருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com