சென்னை: அதிமுகவை துரோகிகளிடம் இருந்து மீட்டெடுப்போம் என்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் வரும் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, டிடிவி தினகரன் தனது கட்சியினருக்கு செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்:
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி, வரும் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை சாலையில் இருந்து பேரணி தொடங்குகிறது. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பேரணி நிறைவடைகிறது. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுகவை மீட்டெடுக்கவும், ஜெயலலிதா காலத்தில் தமிழகம் பெற்றிருந்த உரிமைகள், பெருமைகளை திரும்பப் பெறும் வகையில் சபதம் ஏற்போம் என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.