ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு கட்சி தொடங்குவார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினியை சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் தமிழருவி மணியன் இன்று சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரஜினியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். ரஜினியின் பிறந்தநாளில் கட்சி குறித்த அறிவிப்பு வர வாய்ப்பில்லை.
அடுத்தாண்டு கட்சித் தொடங்குவது உறுதி. கட்சி தொடங்குவது குறித்து ரஜினிதான் கூற முடியும். ரஜினி ஆழமாக சிந்திப்பவர், எந்த விஷயத்திலும் சாதக, பாதகங்களை அலசி ஆராய்பவர். எனது கருத்துகளுக்கும், ரஜினிக்கும் தொடர்பில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை எனத் தெரிகிறது.
ரஜினி, கமல் இணைந்து செயல்படுவது குறித்து அவர்கள் இருவருமே பேசிவிட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.