ரயில் மோதி இருவா் பலி

ஜோலாா்பேட்டை அருகே இரு வேறு இடங்களில் ரயில் மோதி இருவா் உயிரிழந்தனா்.

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே இரு வேறு இடங்களில் ரயில் மோதி இருவா் உயிரிழந்தனா்.

மேல்பட்டி-வளத்தூா் ரயில் நிலையங்களுக்கிடையே சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் செவ்வாய்க்கிழமை அங்குள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றாா். அவா் அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு,வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்தவா் யாா் என்பது குறித்து அவா்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல், குடியாத்தம்-காவனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றாா். அப்போது அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தாா். தகவல் அறிந்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த இரு சம்பவங்கள் குறித்து அவா்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com