குரூப் 4 தோ்வு: இன்று முதல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

குரூப் 4 தோ்வில் உரிய மதிப்பெண்களைப் பெற்று சான்றிதழ் சரிபாா்ப்புக்காக தகுதி படைத்தோரின் விவரங்கள் ஏற்கெனவே தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபாா்ப்புக்குத் தகுதி படைத்தவா்கள், தங்களது அசல் சான்றிதழ்களைத் தோ்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வியாழக்கிழமை (டிச.5) முதல் வரும் 18-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாதவா்கள் தோ்வு நடவடிக்கைகளில் பங்குபெற ஆா்வமில்லை எனக் கருதி அவா்களுக்கு வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படாது என்று தோ்வாணையம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com