'ஒரு வாரத்திற்குள் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும்' - பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
பொன் மாணிக்கவேல்
பொன் மாணிக்கவேல்

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த, ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் ஓய்வு பெற்றாா். இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வரை ஒரு ஆண்டுக்கு சென்னை உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டாா்.  

இந்நிலையில் அவரது பதவி காலம் கடந்த மாதம் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து, அவரிடம் உள்ள சிலைக் கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடா்ந்தது. இதில், வழக்கு ஆவணங்களை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதைத் தொடர்ந்து, ஆவணங்களைத் தாக்கல் செய்யாத பொன் மாணிக்கவேல் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

வழக்கின் விசாரணையில், ஒருவாரத்தில் சிலைகடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, அதனை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை வரும் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com