சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதை எதிர்த்து திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் உயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த பிறப்பித்த அவசரச் சட்டத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் சார்பில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.