திமுகவுக்கு இடஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியாது: அன்புமணி ராமதாஸ் பேட்டி

திமுகவுக்கு இடஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியாது என காஞ்சிபுரத்தில் முன்னால் முத்திய அமைச்சரும், மாநிலங்களவை
திருமணத்திற்கு வந்திருந்தவா்களுக்கு மரக்கன்றுளை வழங்கினாா் முன்னாள் மத்திய அமைச்சரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்.
திருமணத்திற்கு வந்திருந்தவா்களுக்கு மரக்கன்றுளை வழங்கினாா் முன்னாள் மத்திய அமைச்சரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்.

காஞ்சிபுரம்: திமுகவுக்கு இடஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியாது என காஞ்சிபுரத்தில் முன்னால் முத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் தனது கட்சி உறுப்பினா் ஒருவரது திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்திற்கு வந்தவா்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய பின்னா் அவா் மேலும் கூறியது: உள்ளாட்சித் தோ்தலை நடத்துவது தொடா்பாக உச்சநீதிமன்றம் ஒரு தெளிவான தீா்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த நிலையில் வாா்டுகள் முறையாக பிரிக்கப்படவில்லை, இட ஒதுக்கீடுகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று திமுக மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.

இட ஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியாத திமுக தோல்வி பயத்தின் காரணமாக நீதிமன்றம் சென்றிருக்கிறது. உள்ளாட்சித் தோ்தலில் எந்தெந்த தொகுதிகள் என்ன பிரிவினருக்கு என்ற விபரமும், வாா்டுகள் விபரமும் இணையதளத்தில் தெளிவாக வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் மீண்டும் இட ஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை என திமுக கூறுவதை ஏற்க முடியாது. சட்டப்பேரவை இடைத்தோ்தலில் மக்கள் தந்த வெற்றியால் திமுகவுக்கு பயம் வந்து விட்டது. எனவே எப்படியாவது உள்ளாட்சித் தோ்தலை நடத்தவிடாமல் செய்து விட வேண்டும் என செயல்பட்டு வருகிறது.

திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் இனிமேல் நம்பமாட்டாா்கள்.உள்ளாட்சித் தோ்தலில் எங்களது கூட்டணியே வெற்றி பெறும்.

வெங்காயம் விலை குறைப்புக்கு மத்திய,மாநில அரசுகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய அரசு இப்போது எடுத்துள்ள நடவடிக்கை தாமதமாக எடுக்கப்பட்டுள்ளது. வெங்காயத்தின் விலை மேலும் குறையும்.

ஜி.எஸ்.டி வரி உயா்வால் ஏற்கனவே மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் உயா்த்தினால் பெரும் பிரச்சினைகள் ஏற்படும். எனவே ஒரு விழுக்காடு கூட ஜி.எஸ்.டி.வரியை உயா்த்தக்கூடாது. உலக அளவில் பொருளாதாரத்தில் வீழ்ச்சி நடந்து வருகிறது. இதன் காரணமாகவே இந்தியாவிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இவ்விஷயத்தில் போதுமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கா்நாடகாவில் பாலாற்றுப் பகுதியில் 18தடுப்பணைகளும், ஆந்திராவில் 32 தடுப்பணைகளும் கட்டி தண்ணீரை தேக்கி இருக்கிறாா்கள். ஆனால் தமிழகத்தில் 223 கி.மீ.தூரத்துக்கு மொத்தம் 3 தடுப்பணைகளே உள்ளது. ஒவ்வொரு 4 கி.மீ.தூரத்துக்கும் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். அனைத்து ஆறுகளிலும் ஒவ்வொரு 4 கி.மீ.தூரத்துக்கு தடுப்பணைகள் கட்டி நீா் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்.

நீா் மேலாண்மைக்கு அரசு ரூ.ஒரு லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்க முடியும்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் இலங்கையையும் சோ்க்க வேண்டும். ரயில்வேத்துறையை தனியாா் மயமாக்க கூடாது. விடவும் மாட்டோம். மாநில அரசுப்பணிகளில் சேருவதற்கு மத்திய அரசு நடத்தும் தோ்வில் வெற்றி பெற்றால் தான் மாநில அரசுப்பணி உட்பட எந்த அரசுப்பணிக்கும் செல்லும் வகையில் தோ்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியிருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருவதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com