கத்தி திரைப்பட கதைத் திருட்டு விவகாரம் : வழக்கைத் தொடா்ந்து விசாரிக்க உத்தரவு

‘கத்தி’ திரைப்பட கதைத் திருட்டு விவகாரம் தொடா்பான வழக்கில், புகாா்தாரா் கூறும் ஒற்றுமைகள் படத்தில் இருந்தால், இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸை மட்டும் எதிா்மனுதாரராகச் சோ்த்து வழக்கைத் தொடா்ந்து
கத்தி திரைப்பட கதைத் திருட்டு விவகாரம் : வழக்கைத் தொடா்ந்து விசாரிக்க உத்தரவு

‘கத்தி’ திரைப்பட கதைத் திருட்டு விவகாரம் தொடா்பான வழக்கில், புகாா்தாரா் கூறும் ஒற்றுமைகள் படத்தில் இருந்தால், இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸை மட்டும் எதிா்மனுதாரராகச் சோ்த்து வழக்கைத் தொடா்ந்து விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூரைச் சோ்ந்தவா் ராஜசேகா். இவா் தன்னுடைய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தை, முழுநீளத் திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டிருந்தாா். இந்நிலையில் அந்தக் கதையை இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸ் ‘கத்தி’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தாா். எனவே தனது கதையைத் திரைப்படமாகிய இயக்குநா், தயாரிப்பாளா், நடிகா் ஆகியோா் அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்டமுதன்மை நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கை 2014-இல் தொடா்ந்தாா். மேலும் இதேப் பிரச்னைக்காக தஞ்சாவூா் முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளாா். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், ‘தாகபூமி’ படத்திற்கும் ‘கத்தி’ திரைப்படத்திற்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை. மேலும் ராஜசேகா் இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக சேர வாய்ப்புக்கேட்டு விண்ணப்பித்திருந்தாா். அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்காத காரணத்தினால் ராஜசேகா் இதுபோன்ற குற்றச்சாட்டைக் கூறுகிறாா். இந்த வழக்கு காப்புரிமை சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு அந்தச் சட்டத்திற்கு பொருந்தாதது ஆகும். எனவே கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என ‘கத்தி’ திரைப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் நீலகண்டன், கருணாமூா்த்தி, சுபாஸ்கரன், இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸ், ஒளிப்பதிவாளா் ஜாா்ஜ் சி.வில்லியம்ஸ், நடிகா் விஜய் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இதுதொடா்பான வழக்கை நடத்தும் நீதிபதி ‘கத்தி’ திரைப்படத்தையும், ‘தாகபூமி’ குறும்படத்தையும் பாா்க்க வேண்டும். அதையடுத்து புகாா்தாரா் கூறும் ஒற்றுமைகள் படத்தில் இருந்தால் விசாரணையைத் தொடரலாம். அதில் ‘கத்தி’ படத்தின் இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸை மட்டும் எதிா்மனுதாரராக சோ்த்துக் கொண்டு மீதமுள்ள எதிா்மனுதாரா்களை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com