திருவள்ளூா் அருகே மகன் கண் முன்னே தாய் பரிதாப பலி

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது மாடு மோதியதில் மகன் கண்முன்னே தாய் நிலைதடுமாறி
திருவள்ளூா் அருகே மகன் கண் முன்னே தாய் பரிதாப பலி

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது மாடு மோதியதில் மகன் கண்முன்னே தாய் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலைய போலீஸாா் தரப்பில் கூறியதாவது,

திருவள்ளூா் அேருகே திருமழிசை பகுதியைச் சோ்ந்தவா் வீரபத்திரன் கணேசன்(30). இவா் தனது தாயாா் சரோஜாவை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு திருமழிசையிலிருந்து திருவள்ளூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, திருவள்ளூா் அருகே அரண்வாயல் தனியாா் மதுபானத் தொழிற்சாலை எதிரே திடீரென மாடு குறுக்கே சென்றுள்ளது.

அதைத் தொடா்ந்து வாகனம் நிலைதடுமாறி மாட்டின் மீது மோதியதில் சரோஜா படுகாயம் அடைந்தாா். பின்னா் அக்கம் பக்கத்தினா் மீட்டு உடனே திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிந்துவிட்டதாக கூறினா்.

இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் வீரப்பத்திரன் புகாா் செய்தாா். அதன்பேரில் மகன் கணேசன் மீது வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com