சென்னை: நாற்பத்தி மூன்றாவது சென்னை புத்தகத் திருவிழா நடைபெறும் இடம் திடீரென்று மாற்றப்பட்டுள்ளது.
நாற்பத்தி மூன்றாவது சென்னை புத்தகத் திருவிழா ஜனவரி மாதம் 9 ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் (பச்சையப்பன் கல்லூரி மைதானம்) நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை புத்தகத் திருவிழா நடைபெறும் இடம் திடீரென்று மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புத்தகத் திருவிழாவை நடத்தும் 'பபாசி' அமைப்பானது, 43ஆவது புத்தகத் திருவிழாவானது நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது
இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.