மகாகவி பாரதியாரின் 138-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூா் மத்திய சிறையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திரப் போராட்டத்தின்போது ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்ட பாரதி, கடலூா் மத்திய சிறையில் 1918-ஆம் ஆண்டு, நவ.20 முதல் டிச.14-ஆம் தேதி வரை அடைக்கப்பட்டாா். அதன் நினைவாக, இந்தச் சிறை வளாகத்தில் பாரதிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. பாரதியின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு சிறைக் கண்காணிப்பாளா் நிகிலா நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.