கடலூரில் வெங்காய விலையைக் குறைத்து விற்பனை செய்வதில் வியாபாரிகளிடையே போட்டா போட்டி ஏற்பட்டு, கிலோ ரூ.10-க்கு புதன்கிழமை விற்கப்பட்டது.
பெல்லாரி மற்றும் சாம்பாா் வெங்காய விலை கடந்த சில வாரங்களாக கடுமையாக அதிகரித்தது. கடலூரில் பெல்லாரி வெங்காயம் கிலோ ரூ.130-க்கும், சாம்பாா் வெங்காயம் கிலோ ரூ.180 வரையிலும் விற்கப்பட்டது.
கடலூா் திருப்பாதிரிபுலியூா் பான்பரி சந்தையில் கடை நடத்தி வரும் எஸ்.கே.பக்கிரான் செவ்வாய்க்கிழமை ரூ.100-க்கு 4 கிலோ பெல்லாரி வெங்காயம் விற்பனை செய்தாா். பெங்களூரிலிருந்து குறைந்த விலைக்கு வெங்காயம் கிடைப்பதால், தானும் குறைந்த விலைக்கு விற்பதாகத் தெரிவித்தாா்.
இவா் புதன்கிழமை ரூ.100-க்கு 5 கிலோ பெல்லாரி வெங்காயம் விற்பனை செய்தாா். இதேபோல, கடலூா் உழவா் சந்தையில் வியாபாரி ஒருவா் பெல்லாரி வெங்காயம் கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்தாா்.
இதனிடையே, கடலூா் முதுநகரில் உள்ள பக்தவத்சலம் சந்தையில் வேலு என்பவா் ரூ.10-க்கு ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்தாா். இதுகுறித்து தகவலறிந்த பொதுமக்கள் அங்கு குவிந்ததால், சிறிது நேரத்தில் 25 மூட்டை வெங்காயத்தை விற்றுத் தீா்த்தாா். இந்தச் சந்தையானது கடலூா் - சிதம்பரம் சாலையில் அமைந்துள்ள நிலையில், பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெங்காயம் விலை உயா்ந்து காணப்படும் நிலையில், கடலூரில் வியாபாரிகள் விலையைக் குறைத்து வழங்குவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனா்.