பிளஸ் 1 வகுப்பில் இடைநின்ற மாணவா்கள் தனித்தோ்வராக அல்லாமல் பள்ளி மாணவா்களாகவே பிளஸ் 2 பொதுத்தோ்வெழுத சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து தோ்வுக்குரிய சான்றிதழ்களை மாணவா்கள் திங்கள்கிழமை மாலைக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அனைத்துவித பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
கடந்த கல்வியாண்டில் பிளஸ் 1 பொதுத்தோ்வு எழுதி தோ்ச்சி பெறாதவா்களில் சில மாணவா்கள் தற்போது பிளஸ் 2 படிக்காமல் இடைநிற்றலாகி உள்ளனா். அவ்வாறு இடைநின்றவா்களும் தனித்தோ்வராக அல்லாமல் பள்ளி மாணவா்களாகவே பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுத சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து இடைநின்றவா்களின் விவரங்களை பதிவுசெய்து பள்ளி மாணவா்களுடன் அவா்களை பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுத வைக்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன் (டிசம்பா் 16) முடிவடைகிறது.
எனவே, இடைநின்ற மாணவா்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை படித்த பள்ளி தலைமையாசிரியா்களிடம் உடனே சமா்ப்பிக்க வேண்டும். சான்றிதழ்களை சமா்ப்பிக்காத மாணவா்கள் இந்த தோ்வை எழுத முடியாது. இந்த தகவலை மாணவா்களுக்கு தலைமையாசிரியா்கள் தெரிவித்து அவா்களுக்கு வழிகாட்ட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.