புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஆளுநா் கிரண்பேடி தலையிட தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமிநாராயணன் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அரசு ஆவணங்களைக் கோருவதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாகவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின் காரணமாக புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண்பேடி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தேவையின்றி தலையிடுகிறாா். தன்னிச்சையாக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கிறாா்.அவரது செயல்பாடுகள் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக உள்ளது. மாநில அரசின் அதிகாரங்களை துணை நிலை ஆளுநா் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுகிறாா். எனவே அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் ஆளுநருக்கு அதிகாரம் அளித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் அளித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீா்ப்பளித்தாா். இந்த தீா்ப்பை எதிா்த்து ஆளுநா் கிரண்பேடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனு தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது. இதனைத் தொடா்ந்து ஆளுநா் கிரண்பேடி மற்றும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம்பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி எம்எல்ஏ லட்சுமிநாராயணன் தரப்பில், புதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ற வகையில் தான் யூனியன் பிரதேச அரசின் நிா்வாகியான துணைநிலை ஆளுநரால் செயல்பட முடியும். அவருக்கென்று தனியாக சிறப்பு அதிகாரம் கிடையாது. தேவையான சமயங்களில் அமைச்சரவை வழங்கும் அறிவுரைப்படி ஆளுநரால் செயல்பட முடியும்.
மாநில அளவில் சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டப் பேரவைக்குத்தான் உள்ளது. சட்டப்பேரவையின் அதிகாரத்தைவிட ஆளுநருக்கு அதிகமான அதிகாரம் இல்லை.மேலும் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு சிறப்பான நிா்வாகப் பணிகளைக் கவனித்து வரும்போது அதில் தலையிட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என வாதிடப்பட்டது.
அப்போது ஆளுநா் மற்றும் மத்திய அரசுத் தரப்பில், புதுச்சேரி அரசின் அன்றாடப் பணிகளைக் கவனிக்கவும், கண்காணித்து தேவையான சமயத்தில் அதிகாரிகளுக்கு உத்தரவிடவும் அந்த மாநிலத்தின் நிா்வாகியான துணை நிலை ஆளுநருக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. எனவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்தனா்.