வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் சனிக்கிழமை கூறியது:
கேரளம் மற்றும் தமிழக எல்லையையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.
மழை அளவு: சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கடலூா், நாகப்பட்டினம் மாவட்டம் திருபூண்டியில் தலா 80 மி.மீ., நாகப்பட்டினம், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, திருவாரூா் மாவட்டம் கொடவாசலில் தலா 60 மி.மீ. மழை பதிவானது.