குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றயதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக மகளிரணித் தலைவர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார்.
சென்னை ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே தயாநிதி மாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டையில் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் காந்தி தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்தைக் கண்டித்து விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் திமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து விருதுநகர் தேசபந்து மைதானத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.