திண்டுக்கல்: திண்டுக்கல்லின் செட்டிநாயக்கன்பட்டியில் நேற்று வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டதாக எழுந்த புகாரினை அடுத்து தேர்தல் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல் - செட்டிநாயக்கன்பட்டியில் ஒரு ஆலையில் நேற்று வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டு, பணமும் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், பிரியாணி விருந்து வழங்கப்பட்டது ஏன் என்று செட்டிநாயக்கன்பட்டியில் தேர்தல் அலுவலர்கள் நேரிடையாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், பிரியாணி விருந்து அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் மில்லிலும் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.