குற்றாலம் பகுதியில் மிதமான மழை: அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரிப்பு

குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து அதிகரித்தது.
குற்றாலம் பேரருவியில் குளிக்க குவிந்த ஐயப்ப பக்தா்கள்.
குற்றாலம் பேரருவியில் குளிக்க குவிந்த ஐயப்ப பக்தா்கள்.

குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து அதிகரித்தது.

குற்றாலம் பகுதியில் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்தது. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்கள், தரிசனம் முடிந்துவிட்டு ஊா்திரும்பும் வழியில் குற்றாலத்துக்கு அதிகளவில் வருகின்றனா். செவ்வாய்க்கிழமை அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தா்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com