2019-ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுவிழா கோயம்புத்தூர் ராஜஸ்தானி அரங்கில் வரும் டிசம்பர் 27 & 28 ஆம் தேதிகளில் (வெள்ளி & சனிக்கிழமை) நிகழ்கிறது. இவ்வாண்டு கவிஞர் அபி விஷ்ணுபுரம் விருதினைப் பெறுகிறார்.
இவ்வாண்டு மலையாளக் கவிஞர் கே.ஜி.சங்கரப்பிள்ளை அஸாமியக் கவிஞர் ஜான்னவி பருவா ஆகியோர் விருந்தினர்களாக விருதுவிழாவில் கலந்து கொள்கிறார்கள். மேலும், இரு நாட்களிலும் எழுத்தாளர்கள் / கவிஞர்கள் கே.என்.செந்தில், இசை, அமிர்தம் சூரியா, வெண்பா கீதாயன், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், பெருந்தேவி, ரவி சுப்ரமணியன் ஆகியோரின் படைப்புக்களைப் பற்றிய விவாதங்கள் நிகழும். படைப்பாளிகள் அனைவரும் விழாவில் விருந்தினராகக் கலந்து கொள்கிறார்கள்.
கவிஞர் அபி குறித்த நூல் விழா அரங்கில் வெளியிடப்படுகிறது. அவரைப் பற்றிய ஆவணப்படமும் திரையிடப்படும். கவிஞர் ராஜா சந்திரசேகர் தயாரித்த இந்த ஆவணப் படத்தை கே.பி.வினோத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.