ஆம்பூர்: ஆம்பூர் வனப்பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக யானைகள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன.
ஆம்பூர் வனப்பகுதியில் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 20 யானைகள், ஒரு குட்டி யானை கொண்ட யானை கூட்டம் சுற்றி வருகிறது. இதன்காரணமாக வனப் பகுதி எல்லையோர கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். வனத்துறையினர் யானைகளை ஊருக்குள் வர விடாமல் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக ஆம்பூர் அருகே மிட்டாளம் வனப்பகுதியில் வனவர் சதிஷ் குமார் தலைமையில் 15க்கும் மேற்பட்ட வனக்காப்பாளர்கள், கிராம இளைஞர்கள் சுமார் 25 பேர் உள்ளிட்ட குழுவினர் யானைகளை ஊருக்குள் வரவிடாமல் தடுக்க முகாமிட்டுள்ளனர்.