கிண்டி சிறுவர் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தில் மாற்றமில்லை: தமிழக அரசு

சென்னை, கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் பார்வையாளர்களுக்கான நுழைவுக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கிண்டி சிறுவர் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தில் மாற்றமில்லை: தமிழக அரசு


சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் பார்வையாளர்களுக்கான நுழைவுக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக கிண்டி சிறுவர் பூங்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விலங்குகளை தத்ரூபமாக பார்க்கும் சிறப்பு நிகழ்ச்சிக்கான நுழைவுக் கட்டணம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில், கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில், விலங்குகளை தத்ரூபமாகப் பார்க்கும் சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறுவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.15 ஆகவும், பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதை அடுத்து, சிறுவர் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com