ராணிப்பேட்டையில் தனது மகனுக்கு வேலை வழங்கக் கோரி முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் தனது 31 வயதாகும் பட்டதாரி மகன் மற்றும் பட்டதாரி மருமகனுக்கு அரசு வேலை வழங்க கோரி முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கெஞ்சினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.