வாக்குச்சீட்டில் குளறுபடி ஏற்பட்டதால் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாணிக்கோட்டகம் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாணிக்கோட்டகம் ஊராட்சியின் 2-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேர் போட்டியிட்டனர்.
ஆனால், இதற்கான வாக்குச்சீட்டில் 5 சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. சுமார் 122 வாக்குகள் பதிவான நிலையில், இந்தக் குளறுபடி கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தாணிக்கோட்டகம் ஊராட்சியின் 2-ஆவது வார்டுக்கான வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. இந்த வார்டுக்கான வாக்குப் பதிவு ஜன. 1-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.