மேட்டுப்பாளையம்: தேர்தலை புறக்கணித்து மக்கள் கருப்புக்கொடி போராட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட கிராம மக்கள் சாலை வசதி கேட்டு கருப்பு கொடியுடன் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மேட்டுப்பாளையம்: தேர்தலை புறக்கணித்து மக்கள் கருப்புக்கொடி போராட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட கிராம மக்கள் சாலை வசதி கேட்டு கருப்பு கொடியுடன் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை (டிச.30) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 45.76 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியங்காடு ஊராட்சி அரக்கடவு, மூனுகுட்டை கிராம மக்கள் சாலை வசதி கேட்டு கருப்பு கொடியுடன் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com