பாசனத்திற்காக விழுப்புரம் மாவட்டம் வீடுர் அணையை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சியில் அமைந்துள்ள வீடுர் அணை. சங்கராபரணி ஆறு மற்றும் பெரியாற்றின் சங்கமிக்கும் இடம். ஏற்கனவே வடகிழக்குப் பருவமழை காரணமாக வீடுர் அணை நிரம்பியது.
இந்நிலையில், பாசனத்திற்காக வீடுர் அணை திறக்கப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இதனை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.