தமிழக அரசின் 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 2 ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதில் உரையுடன் ஜனவரி 8 ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் முடிவடைந்தது.
இந்த நிலையில், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியதும் 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
அதன் முக்கிய அம்சங்கள்: