தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கவில்லை: அமைச்சர் டி.ஜெயக்குமார்

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கவில்லை என்று, அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கவில்லை: அமைச்சர் டி.ஜெயக்குமார்


மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கவில்லை என்று, அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில்  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டம் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி குறித்து முறையாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று தொடர்ந்து முதல்வர் பழனிசாமி தெரிவித்து வருகிறார். அதே நிலைதான் தற்போதும் உள்ளது. கூட்டணி குறித்து இந்தக் கூட்டத்தில் எதுவும் பேசப்படவில்லை.
தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி குறித்து அறிவிப்பு வரும்.  மிகப்பெரிய கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். எந்தக் கட்சி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். இப்போது வரை யாரும் எங்கள் கூட்டணியில் இல்லை. எங்கள் தலைமையில் மெகா கூட்டணி அமையும். இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. தற்போது மாவட்ட செயலாளர்கள் ஒருமித்த கருத்தோடு கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுகிறோம் என்றார் அமைச்சர் டி.ஜெயக்குமார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com