திருப்பூரில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தலைமையில் மதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. மின்மாற்றி மீது ஏறி மதிமுக தொண்டர் போராட்டம் நடத்தினார்.
இதையடுத்து பிரதமர் மோடி வருகைக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
அதுபோன்று பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் டவுன்ஹால் பகுதியில் பெரியார் கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கோவை ராமகிருஷ்ணன், திருமுருகன் காந்தி மற்றும் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.