நாட்டறம்பள்ளி அருகே நடந்த விபத்துகளில் மூதாட்டி உள்பட 2 பேர் இறந்தனர்.
நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் முனிசாமி மனைவி காசியம்மாள் (75). இவர், கடந்த மாதம் 26-ஆம் தேதி வீட்டிலிருந்து குனிச்சியூர் சாலையில் நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த பைக் மோதி பலத்த காயமடைந்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
வாணியம்பாடி தாலுகா பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (33) தொழிலாளியான இவர், கடந்த 3-ஆம் தேதி வாணியம்பாடியிலிருந்து நாட்டறம்பள்ளி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். கேத்தாண்டப்பட்டி ஜீவா நகர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயசீலன் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
இந்த இரு விபத்துகள் குறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.