விழுப்புரம் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவிகள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
விழுப்புரம் அருகே கக்கனூரைச் சேர்ந்த மணி மகள் மணிமொழி (14), சண்முகம் மகள் பவதாரணி (11), ஏழுமலை மகள் கௌசல்யா (13), மூவரும் பள்ளி மாணவியர்.
பள்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், திருநாவுக்கரசு என்பவரின் விவசாயக் கிணற்றில் மூவரும் குளிக்கச் சென்றனர். 30 அடி ஆழம் கொண்ட அந்தக் கிணற்றில் 10 அடி தண்ணீர் உள்ளது.
கிணற்றில் துணி துவைத்த போது மணிமொழி கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். கௌசல்யா, பவதாரணி ஆகியோர் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர். இதில், இருவரும் கிணற்றுக்குள் விழுந்தனர். மூவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். கெடார் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.