'தினசரி கதாநாயகன் சின்னதம்பி' என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று சின்னத்தம்பி யானையின் தற்போதைய நிலை என்ன? என காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஆர். ராமசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 'தினசரி கதாநாயகன் சின்னதம்பி' என்றும் எந்த விலங்கையும் துன்புறுத்தும் எண்ணம் அரசிற்கு இல்லை என்றும் அப்போது தெரிவித்தார்.
மேலும் சின்னத்தம்பி யானையை வனத்திற்குள் விடுவதா என்பது குறித்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.