பிரதமர் மோடியின் தமிழக வருகை மார்ச் 1க்கு ஒத்திவைப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் கன்னியாகுமரி வருகை பிப்ரவரி 19க்கு பதில் மார்ச் 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர்
பிரதமர் மோடியின் தமிழக வருகை மார்ச் 1க்கு ஒத்திவைப்பு


சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் கன்னியாகுமரி வருகை பிப்ரவரி 19க்கு பதில் மார்ச் 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

கடந்த மாதம் 27 ஆம் தேதி மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி, தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார். 

பின்னர், பாஜகக் பொது கூட்டத்திலும் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.10) திருப்பூர் வந்த பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர், மற்றொரு தனி மேடையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார். 

தொடர்ந்து, வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரிக்கு மோடி வருவதாகவும், அப்போது, வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடியின் குமரி வருகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும், 19 ஆம் தேதிக்கு பதில் மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் கன்னியாகுமரி வர உள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com