என் தொகுதிக்கு ஏதாவது செய்யுங்கள்: கருணாஸ்

என்னுடைய திருவாடனை தொகுதிக்கு ஏதாவது செய்யுங்கள் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.


என்னுடைய திருவாடனை தொகுதிக்கு ஏதாவது செய்யுங்கள் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கருணாஸ் பேசியது:
திருவாடனை தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாகச் செலவிட்டுள்ளேன். அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டத்தை என் தொகுதிக்கு செய்து கொடுங்கள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு எம்.எல்.ஏ.வாக இருக்கிறேனோ இல்லையோ தெரியாது. தற்போது எம்.எல்.ஏ.வாக இருந்தேன் என்று தொகுதியின் வரலாற்றில் பதிவு செய்வதற்காகவாவது  ஏதாவது செய்து கொடுங்கள். ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ. ஆனேன். அவருடைய ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அதற்கு என்னுடைய ஆதரவு உண்டு என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com