என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் வழக்கில் இருந்து மீண்டு வருவேன் என்று, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பாலகிருஷ்ணா ரெட்டி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
ஆயிரம் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதற்கேற்ப என் மீதான வழக்கிலிருந்து கண்டிப்பாக நான் விடுபடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, அ.தி.மு.க. தலைமையில் அதிக கட்சிகளைச் சேர்த்து பலமான கூட்டணி அமைக்க முதல்வரும், துணை முதல்வரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் தேர்வில், அ.தி.மு.க. முக்கியப் பங்கு வகிக்கும் என்றார்.