மக்களவைத் தேர்தலுடன் காலியாக உள்ள சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக அரசின் கோரிக்கையை ஏற்று, இந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இப்போது நடத்த வேண்டாம் என தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு நிர்பந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அரசியல் அமைப்பு சட்டத்தைச் சிதைக்கும் செயலாகும்.
எனவே, தேர்தல் ஆணையம் எந்தவித நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகாமல், அரசியலமைப்புக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.